தூக்கமில்லா இரவுகள்
அவன் விழித்தான். சமயம் பார்த்தான் செல் போனில்
2.50 AM
என்ன செய்வது
முழித்தான்
பார்த்த கனவு ஞாபகமில்லை
எண்ணங்கள் அலை போல் வருகை
லைட்டை போட்டால்?
வேண்டாம் ...நப்பாசை
போன தூக்கம் திருப்பி வந்தால்
வரவேற்க வேண்டாமா இருட்டில
என்ன யோசிப்பது என்று எண்ணம்
மெடிடேஷன்?
அதற்கு தனிமை வேண்டும்
எண்ணங்களின் துணை இருக்கும்போதல்ல
20 வர்ஷம் ஆச்சு அவள் போய்
மங்கிய நினைவுகள்
என்னோடு TIME எப்போ?
நேற்றைய இறப்புகள் ஞாபத்தில் இப்போ
தேவையில்லாது .....
ஹ்ம்ம்...
ஏதாவது கொரிக்கலாமா
............
புரண்டு படுக்கலாமா எழுந்து உட்காரலாமா
என்ன செய்வது
ஏன் செய்ய வேண்டும்?
குரு நாம ஸ்மரணம்
தூக்கம் தழுவியது